வேலணை, அனலைதீவுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்: மக்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துலையாடல்

யாழ்ப்பாணம்,ஒக் 15

பெரும்போக விவசாய செய்கைக்கு தேவையான மண்ணெண்ணையைப் பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விவசாயிகள் கோரிக்கை முன்வைத்துள்ளதுடன், கமநலத் திணைக்களத்திற்கு கிடைக்கின்ற உர வகைகள் முழுமையாக விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.

வேலணை கமநலத் திணைக்களத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலிலேயே குறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும் அனலைதீவு பொது வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வைத்தியசாலையின் செயற்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்ததுடன், வைத்தியசாலை சமூகத்தினரால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிகளுடன் கலந்துரையாடினார்.

இதனிடையே அனலைதீவு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல், அனலைதீவு ஐயனார் கோவில் அன்னதான மண்டபத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், பிரதேச மக்கள் தங்களுடைய எதிர்பார்ப்புக்களை அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *