மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை!

களனி கங்கை, களு கங்கை, குடு கங்கை மற்றும் அத்தனகலு ஓயா பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

பத்தேகம பிரதேசத்தில் ஜின் கங்கையில் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது

இதேவேளை, களனி கங்கை பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் 1,620 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பியகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதியொன்று வெள்ளத்தில் மூழ்கியதால் மல்வான, யபரலுவ வடக்கு, யபரலுவ தெற்கு, பியகம கிழக்கு மற்றும் தெற்கு ஆகிய பிரதேசங்களில் உள்ள 682 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *