சாதா போதை விற்பனையாளரை மடக்கிப் பிடித்த மானிப்பாய் பொலிஸார்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில் உள்ள கடை ஒன்றில் சாதா போதைவஸ்து விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
சங்கானை சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கு அண்மையில் உள்ள கடை ஒன்றில் சாதா போதைவஸ்து விற்பனை செய்வதாக மானிப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

அதனையடுத்து மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது சாதா போதைவஸ்தும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு  வருகின்றனர்.
அண்மைக்காலமாக பதின்ம வயது இளைஞர்கள் அந்தக் கடையில் கொள்வனவு செய்யும் போதைவஸ்துக்களை பாவித்துவிட்டு வீதியில் செல்லும் மாணவர்களுடனும் ஏனையோராடனும் முரண்பட்டுக் கொள்வதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த கடைக்கு அண்மையில் பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலையம் என்பன அமைந்துள்ள நிலையில் இவ்வாறான போதை விநியோகமானது மாணவர்களை தவறான வழிக்குள் தள்ளுவதற்கு வழி சமைக்கக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது. அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *