கடவுளை தேடிச் சென்று கைப்பையை இழந்த பெண்:யாழில் சம்பவம்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் – சீரணி அம்மன் ஆலயத்தினை தரிசிக்க வந்த பெண்ணின் கைப்பை களவாடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றையதினம் (14) குறித்த பெண் ஆலயத்தை தரிசிக்க வந்த பெண் மோட்டார் சைக்கிளில் தனது கைப்பையினை வைத்துவிட்டு ஆலயத்தினை தரிசித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தவேளை கைப்பை களவாடப்பட்டிருந்தது.

இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த கைப்பையில் கைத்தொலைபேசி இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *