யாழ், தென்மராட்சி வாசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

யாழ்.தென்மராட்சி பிரதேச செயலகத்தினால் வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போருக்கான முதலாம் கட்ட நேர்முகத்தேர்வு நடத்தப்படவுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வழிகாட்டலில் இந்த நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது.

மேற்படி நேர்முகத்தேர்வு எதிர்வரும் 17ஆம், 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் காலை 9.00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தென்மராட்சிப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட ஆர்வமுள்ளவர்கள் குறித்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதுடன் வரும்போது தொழில் தகைமைச் சான்றிதழ்கள் மற்றும் ஏனைய ஆவணங்களுடன் சமுகமளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *