ஆபத்தான தருணத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் – இந்திய துணை தூதர் ராகேஷ் நடராஜ் தெரிவிப்பு!

இலங்கைக்கு ஆபத்தான தருணத்தில் நிபந்தனை இன்றி இந்தியா உதவியமை உண்மையான நட்புப் பந்தத்தின் அடையாளம் என யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை கரைச்சி பிரதேச சபையின் கலாச்சார விழாவில் விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை பொருளாதார ரீதியான ஆபத்தை எதிர் நோக்கிய போது இலங்கை வாழ் மக்களின் நிலை அறிந்து நிபந்தனை இன்றி இலங்கைக்கு இந்தியா உதவியது.

வேறு எந்த நாடும் வழங்காத எரிபொருள், மருத்துவப் பொருட்கள் ,உலர் உணவுப் பொருட்கள் என பல்வேறுபட்ட உதவிகளை கடந்த எட்டு மாதத்துக்குள் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியுள்ளது.

எட்டு மாதங்களுக்குள் இந்தியாவினால் இலங்கைக்கு சுமார் 4பில்லியன் அமெரிக்க டெலராகள்  வழங்கப்பட்ட உதவிகள் பல கோடி 

ஆகவே இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகள் இலங்கை இந்தியா தேசத்தின் உண்மையான நட்பு பந்தத்தின் அடையாளமாக  வழங்கப்பட்டமையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *