அதிகாரம் இல்லாத மக்கள் சபையை உருவாக்குவதில் எந்த பயனும் இல்லை- இளங்கோ தெரிவிப்பு!

அதிகாரம் எங்கே இருக்குதோ அந்த அதிகாரத்தை நோக்கி தான் எல்லோரும் பயணிப்போம்.அவ்வாறு தான் நாம் இருக்கிறோம்.அதனை மாற்ற முடியுமா? என்பது கேள்வியாக இருக்கிறது. பாராளுமன்றம்,அரச இயந்திரம் நீதிமன்றம் ஆகிய மூன்றும் தங்களின் அதிகாரங்களை தங்கள் கைகளிலே வைத்திருக்கின்றன.இங்கே அனைத்து முடிவுகளும் தங்களின் தேவைக்கு ஏற்ற மாதிரி முடிவுகள் எடுக்கப்படுகின்றது என்றே நாங்கள் பார்க்கின்றோம் என வழக்கறிஞர் இளங்கோ தெரிவித்தார்.

யாழில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

அதிகார நிலையில் பிரித்தானியர் இலங்கையில் உள்ள சிலருக்கு அதிகாரத்தை தாரை வார்த்து கொடுத்தார்கள்.அதே அதிகாரத்தை தங்கள் கைகளில் எவ்வாறு வைத்திருக்கிறார்கள் என்பதை தான் பார்க்கலாம்.

அதிகாரம் இல்லாத மக்கள் சபையை உருவாக்குவதில் எந்த பயனும் இல்லை என நான் நினைக்கின்றேன். கிராம மட்டத்தில் பல சங்கங்கள் இருந்தன.அந்த சங்கங்கள் அனைத்தும் அரச அதிகாரிகளின் கீழ் செயல்படும் .அந்த அரச அதிகாரிகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் கொடுக்கிறார்கள்.

இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடைய வரப்பிரசாரத்திற்கும் எங்களுடைய வரிப்பணத்தில் இருந்து தான் போகின்றது.ஆனால் அவர்களை எந்த இடத்திலாவது பொறுப்புக்கூற வைக்க முடியுமா? இன்றும் அது முடியாத நிலையில் தான் உள்ளது எனவும் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *