யாழில் ஆலயத்தினை தரிசிக்க வந்த பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

யாழில் ஆலயத்தினை தரிசிக்க வந்த பெண்ணின் கைப்பை கலவடாப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது நேற்றையதினம் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் – சீரணி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.

நேற்று (14-10-2022) கோயிலுக்குச் செல்ல வந்த பெண் தனது கைப்பையை மோட்டார் சைக்கிளில் வைத்துவிட்டு கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது கைப்பை திருடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைப்பையில் கையடக்கத் தொலைபேசி இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *