யாழில் பொலிஸார் கைது செய்த வீடுடைத்து திருட்டு மற்றும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அல்வாய் பிரதேசத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 3 பவுன் தாலி, 2 பவுன் செயின், மோட்டார் சைக்கிள் மற்றும் ஐபோன் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபரிடம் இருந்து 3 கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நேற்று நண்பகல் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்த நிலையில், இன்று அதிகாலை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
கழிவறை மண்டபத்தின் ஜன்னல் இடைவெளி வழியாக அவர் தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், இந்த கும்பலைச் சேர்ந்த மற்றவர்களும் தலைமறைவாக உள்ளதால் அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.