யாழில் புடவைக்கடையில் வேலை செய்து கொண்டு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வர்தகர்களை கைது செய்த பொலிஸார்!

ஆயிரம் மாத்திரைகள் மற்றும் ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.நகர் பகுதியில் உள்ள மூன்று புடவைக் கடைகளில் பணிபுரிபவர்கள் எனவும் போதைப்பொருள் மற்றும் ஹெரோயின் விற்பனை செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த நபர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *