தேசிய மின்கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ள நீர் மின்சாரம்!

தேசிய மின்கட்டமைப்பில் தற்போது 60 சதவீத நீர் மின்சாரம் இணைக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

தற்போது மின்னுற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 78 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதற்கமைய நேற்று, நேற்று முன்தினங்களில் தேசிய மின்கட்டமைப்பில் 60 சதவீத மின்சாரம் இணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, திருத்தப் பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாம் அலகு அடுத்த வாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளது.

இதன்படி, 300 மெகாவோட் மின்சாரம் தேசிய கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *