மஹிந்தவின் மகனாக இருப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்- நாமல் பெருமிதம்!

இணையத்தில் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை ‘நாக்கி மைனா’ என்றும் அவரை ‘பொடி மைனா’ என்றும் விமர்சிப்பதாகவும், மக்கள் அவரை மஹிந்த ராஜபக்சவின் மகனாக ஏற்றுக்கொண்டதால் தான் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.

2005ஆம் ஆண்டு 5% பேருக்கு மட்டுமே இணையம் இருந்தது. மகிந்த ராஜபக்ச அறிமுகப்படுத்திய இணையத்தை இன்று மக்கள் பயன்படுத்தி அவரை “நாக்கி மைனா” என்று அழைக்கின்றனர்.

ரணில் விக்கிரமசிங்க புனர்வாழ்வளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியினர் சிலர் குழப்பமடைந்துள்ளதாகவும், அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மை எனவும் தெரிவித்தார்.

“ரணில் விக்கிரமசிங்க முன்பு போல் இப்போது மேற்குலகிற்கு விசுவாசமாக இல்லை.

அவர் தூதரகங்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படவில்லை.

இனி மனித உரிமைகள் பற்றி பேசவில்லை. கோட்டாபய ராஜபக்ச மனித உரிமைகளை மதித்த போதிலும், ரணில் விக்கிரமசிங்க காலி முகத்திடலை துடைத்தெறிந்தார்,” என்று அவர் கூறினார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *