சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ள களு கங்கையின் நீர் மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
மில்லகந்த பிரதேசத்திலிருந்து களுகங்கையின் நீர்மட்டம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் 7 அடி 9 அங்குலமாக உயர்ந்துள்ளதாக நீரியல் மற்றும் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர தெரிவித்தார்.
மேலும், அத்தனகலு ஓயாவில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், தற்போது சிறிதளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, பத்தேகம பிரதேசத்தில் ஜிங் கங்கை நீர் மட்டம் சிறிதளவு அதிகரித்து வருகின்றது.
பிறசெய்திகள்