சாவகச்சேரியில் மூதாட்டியைத் தாக்கி நகை மற்றும் பணம் கொள்ளை!

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை-ஐயா கடைச் சந்திப் பகுதியைச் சேர்ந்த வீடொன்றில் 16/10 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் வீட்டில் தனித்திருந்த மூதாட்டியைத் தாக்கி நகை மற்றும் பணம் ஆகியன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

அதிகாலை 3மணியளவில் வீட்டின் முன்பக்க கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையன் தனிமையில் இருந்த மூதாட்டியை கன்னத்தில் தாக்கி விட்டு வீட்டில் இருந்த பத்தரைப் பவுண் நகை மற்றும் ஒரு இலட்சத்து 13,000 ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றிருப்பதாக சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முகமூடி,கையுறை ஆகியன அணிந்து வந்த கொள்ளையன் ஒருவனே குறித்த துணிகர திருட்டில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *