யாழில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது

இன்றையதினம் ஐஸ் போதைப் பொருளுடன் யாழில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து 2 கிராம் 70 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

மன்னாரிலிருந்து போதைப்பொருளை எடுத்து வந்து விற்பனை செய்வது பொலிஸாருக்கு தெரிய வந்த நிலையில், இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதுதொடர்பில் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்ட அலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

26, 34 மற்றும் 42 வயதுடைய சந்தேகநபர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே இவ் கைது நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

குறித்த மூவரையும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *