அத்தியாவசிய பொருட்களை பெற உதவுமாறு மக்கள் கோரிக்கை

வேலணையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – சரவணை மேற்கு, வேலணை J/21 கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட ஒரு பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்தே குறித்த பகுதி முடக்கப்பட்டுள்ளது.

76 குடும்பங்களை கொண்ட குறித்த பகுதி நேற்று முன்தினம் (01) தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டு 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில், கைவசம் உள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தீர்ந்துள்ளதாகவும், நிவாரண பொருட்கள் உரிய வகையில் கிடைக்கப்பெறவில்லை எனவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

எனவே அத்தியாவசிய பொருட்களை பெற உதவுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *