நாடு இன்று பாதாளக் குழிக்குள் வீழ்ந்து தவிக்கின்றது ,இதற்கு முழுப் பொறுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே என்று பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார்.
ஆட்டி வைத்தவர்கள் கோட்ட அரசு. கூத்து பாப்பவர்கள் ரணில் அரசு.
நாட்டை மோசமான நிலைக்கு நகர்த்தி விட்டு சென்ற முன்னைய அரசாங்கம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதை காதில் வாங்கி கொள்ளாமல் ராஜபக்ஸ குடும்பத்தை மிகவும் கவனமாக பாதுகாத்து வருகின்றார் ஜனாதிபதி ரணில். நாட்டை ஆட்டுவித்துச் சென்றவர் கோட்ட. இன்று மீதிக் கூத்து பாக்கின்றார் ரணில்.
அரசாங்கம் என்ற வகையில் பொருளாதாரக் குற்றம் புரிந்தவர்களுக்கு,பிழையான தீர்மானம் எடுத்தவர்களுக்கு, நாட்டை மோசமான நிலைக்கு தள்ளியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் எதிர் பார்ப்பபை நிறைவேற்ற வேண்டும் என்பதை நாம் கூறி கொள்ள விரும்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.
பிறசெய்திகள்