வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் இயலுமை ஜனாதிபதியிடம் உள்ளது – நாமல்

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு இயலுமை காணப்பட்டதை போன்று, வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வந்தமைக்கான இயலுமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையிலேயே காலிமுகத்திடல் போராட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும் நாமல் தெரிவித்தார்.

இதேவேளை மனித உரிமைகள் தொடர்பில் பேசிக்கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்க தற்போது அவ்வாறு கூறுவது இல்லை என்றும் மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவு வழங்கினாலும் தற்போது அவர் அவ்வாறு செயற்படுவது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *