பாகிஸ்தானில் ஓடும் வாகனத்தில் குண்டு வெடிப்பு! – மூவர் பலி

பாகிஸ்தானில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு வாகனங்கள் மீது தீவிரவாதிகளால் இலக்கு வைக்கப்பட்ட குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், குண்டு வெடிப்பு நடைபெற்று 3 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பாகிஸ்தானில் மஸ்துங் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அடையாளம் தெரியாத நபர்களால் ஏற்கனவே தாக்கி கொல்லப்பட்ட நபர் ஒருவரின் இறுதி சடங்குகளை மேற்கொண்டு விட்டு திரும்பிய வாகனத்தின் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் கடந்த சனிக்கிழமை அதே பிரதேசத்தில் நான்கு பேர் இதே மாதிரியான வெடிகுண்டு தாக்குதலில் இறந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் கடந்த ஒக்டோபர் 2 ஆம் திகதி மற்றுமொரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதில் மூன்று பேர் இறந்து இருந்தனர். எவ்வாறாயினும் தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத குழுவும் இன்னும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *