
வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்,
வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
காணாமல் போனோர் அலுவலகம் ஊடாக வழங்கப்படும் இழப்பீடு தமக்கு வேண்டாம் என்றும் சர்வதேச விசாரணை தேவை என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு மேலதிகமாக ஒரு இலட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.