தீபாவளியை கொண்டாட முடியாத நிலையில் இந்துக்கள் : வெளியான காரணம்!

தீபாவளியை முன்னிட்டு, மலையோர பகுதிகளில் உள்ள மக்கள் தீபாவளியை முறையாக கொண்டாட முடியாமல் தவித்து வருகின்றனர்.

குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் கடந்த காலத்தைப் போன்று எதிர்வரும் தீபாவளியை கொண்டாடும் நிலையில் இல்லை என தெரிவிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. அரசின் வரி விதிப்பால் தற்போது விலை அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

15000/= முன்பணம் பெற்றாலும் புதிய ஆடைகளை அணிய முடியாது. ஆடைகளின் விலையும் உயர்ந்துள்ளது. கோதுமை மாவை ரூ.290/= என்ற விலையில் விற்க வேண்டும் என்று அரசு கூறினாலும், மாநகரில் ரூ.450/= என்ற விலையில் விற்கப்படுவதைக் காணமுடிகிறது. இதேபோல் மற்ற பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

மத்திய மலைநாட்டு இந்துக்கள் இம்முறை தீபாவளியை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மத்திய மலைநாடு மட்டுமல்லாது அனைத்து சைவ மக்களையும் பாதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *