
இலங்கை அரசாங்கத்தின் புதிய வரி கொள்கையால் வெளிநாட்டு முதலீடுகளை இழக்க நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
சமகால அரசாங்கத்தின் வரி அதிகரிப்பு முறைகளால் மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். ஆகையால் அரசாங்கம் இதில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.