யாழில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் மீட்பு !

யாழ்ப்பாணம் , வடமராட்சி வல்லிபுர குறிச்சி பகுதியில் வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வல்லிபுர குறிச்சி பகுதியில் கடுமையான வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர் காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் காயங்களுடன் காணப்பட்டவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *