வவுனியாவில் குளவிகொட்டுக்கு இலக்காகிய 32 மாணவர்கள் வைத்தியசாலையில்!

வவுனியா, ஒக்.17

வவுனியா தெற்கு சிங்கள கோட்ட பிரிவுக்குட்ப போகஸ்வேவ மகா வித்தியாலயத்தில் இன்று காலை வழிபாட்டு ஒன்று கூடலின் போது மரம் ஒன்றில் காணப்பட்ட குளவி கலைந்து பறந்து பாடசாலை மாணவர்கள் மீது தாக்கியுள்ளது.

பாடசாலையின் 32 மாணவர்கள் உட்பட 8 ஆசிரியர்கள் பாதிப்புக்குள்ளாகி அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

பதவிய வைத்தியசாலையில் 12 மாணவர்களும் மாமடு வைத்தியசாலையில் 3 மாணவர்களும் வவுனியா பொதுவைத்தியசாலையில் 12 மாணவர்கள் உட்பட 8 ஆசிரியர்களும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

நீண்டகாலமாக வன இலாக்கா மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்தும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை என அப்பிரதேசத்திற்கான பிரதேச சபை உறுப்பினர் கருத்து தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *