வவுனியாவில் குளவி கொட்டியதில் 40 பேர் வைத்தியசாலையில் அனுமதி

<!–

வவுனியாவில் குளவி கொட்டியதில் 40 பேர் வைத்தியசாலையில் அனுமதி – Athavan News

வவுனியா போகஸ்வெவ மகாவித்தியலயத்தில் மாணவர்கள் உட்பட ஆசாரியர்களுக்கு குளவி கொட்டியதில் 40 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) பாடசாலை பிரார்த்தனையில் ஈட்பட்டிருந்தபோது பாடசாலை கட்டிடத்தில் காணப்பட்ட குளவி கூடு கலைந்ததினாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உட்பட ஆசாரியர்களில் பதவியா வைத்தியசாலையிலும் 3 பேர் மாமடு வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்ட அதே நேரம் 20 அதிகமானோர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *