புத்தளத்தில் அஹதிய்யா மாணவர்களுக்கு வழிகாட்டல் செயலமர்வு!

புத்தளம் – மணல்குன்று அஹதிய்யா  சன்மார்க்கப் போதனா பாடசாலையில் அஹதிய்யா முகாமைத்துவக் குழு புத்தளம் மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளனத்தினால் வழிகாட்டல் விழிப்புணர்வும், ஆலோசனை நிகழ்வும்  மணல்குன்று மு.ம.வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

மணல்குன்று   அஹதிய்யா சன்மார்க்கப் போதனா பீட பாடசாலையின் தலைவரும், மன்பாஉஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியின் பணிப்பாளருமான அஷ்ஷெஹ் ஏ.எம்.எம். ரியாஸ் ஹாபிஸ் (தேவ்பந்தி)  தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.அலா அஹமட் கலந்து கொண்டதுடன், மணல் குன்று முஸ்லிம் மகாவித்தியாலய அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.அக்ரம்,அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளன  பிரதித் தலைவர் பாரூக் பதீன் ஆசிரியர் , மணல் குன்று அஹதிய்யா பாடசாலை அதிபர் எம்.என்.எப்.நளீஸா, மணல் குன்று கிளை அஹதிய்யா பாடசாலை அதிபர்கள்,  ஆசிரியர்கள்,   உறுப்பினர்கள்,  உலமாக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

இதன்போது, அஹதிய்யா பாடசாலை அதிபர்கள் , உலமாக்கள்,ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான வழிகாட்டல் ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *