
பருத்தித்துறை கடற்பரப்பு பகுதீயில் சட்ட விரோதமாக அட்டைப் பண்ணைகள்அமைத்திருப்பதற்கு எதிராக இன்று பருத்தித்துறை கடற்தொழிலாளர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனை அடுத்து அவர்கள் சமூக ஊடகத்துக்கு கருத்து தெரிவித்திருந்தனர்.
அவர்கள் தெரிவித்ததாவது;
பருத்தித்துறை பகுதியில் சட்ட விரோதமாக அட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.இது தொடர்பாக பிரதேச செயலாளரிடமிருந்து தகவல் அறியும் சட்டத்தினூடாக அங்கு யாரும் அவ்வாறு பண்ணைகள் அமைக்கப்படவில்லை என்று பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்டது.
நாம் இதனை வேறு திணைக்களத்தினூடாக ,நெக்ட்ராவுடன் தொலைபேசி ஊடாக கேட்டதில் அவர் தகுந்த பதில் கூறவில்லை.இது தொடர்பாக இப்பொழுது மனித உரிமை ஆணைக்குழுவிடம் பாதிப்படைந்த தொழிலாளர்கள் என்ற ரீதியில் அந்த கடல் அடடை பண்ணைகளை அகற்றுவதற்குரிய முயற்சிகளை எடுக்குமாறு மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட்டு இருக்கிறோம்.
இதானல் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்படைகிறார்கள்.கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினூடாக இல்லாது ஒரு அகந்தையாக அந்த அடடை வளர்ப்பு செய்திருக்கிறார்கள் இதனை உரிய அதிகாரிகளிடம் முறையிட்டு இயலாத நிலையிலே நாங்கள் இன்று மனித உரிமை ஆணைக்குழுவிடம் வந்திருக்கிறோம்.
அந்த பண்ணைகள் 50 ஏக்கர் நிலப்பரப்பில் அடைத்து வைத்துள்ளதால் தொழில் செய்ய முடியவில்லை.அந்த பகுதியில் தான் மீன் இனப்பெருக்கமடைய இடமாகவும்,பவளப்பாறைகள் நிறைந்த இடமாகவும், தொழிலாளிகள் தொழில் செய்கின்ற இடமாகவும் இருக்கின்றன.இதனை அகற்றுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்றனர்.
பிறசெய்திகள்