இனி கியூ.ஆர் கோட் இல்லாமல் எரிபொருள் நிரப்பலாம்

சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக,அவரச நிலைமைகளில் கியூ,ஆர் முறைமை இல்லாமல் எரிபொருளை பெற்றுக் கொடுப்பதற்கு கம்பஹா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். திரு.சத்யானந்தா ஒப்புதல் அளித்துள்ளார்.

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட கம்பஹா மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கம்பஹா மாவட்ட செயலகத்தில் நேற்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், கியூஆர் அமைப்பின் மூலம் எரிபொருளை பெற்றுக்கொள்வது அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தடையாக இருப்பதாக சுட்டிக்காட்டினர்.

அதன்படி, தேவைக்கு ஏற்ப QR முறைக்கு வெளியே எரிபொருளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கம்பஹா ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், இது தொடர்பில் மாவட்ட உள்ளுராட்சி தலைவர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *