சைபர் தொழில்நுட்பம் மூலம் பல்கலைக்கழகங்களில் அதிகரிக்கும் பகிடிவதை!

கொழும்பு, ஒக்.17
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்கலைக்கழக மாணவர்களை மிகவும் நுட்பமான முறையில் துன்புறுத்துவதில் புதிய போக்கு காணப்படுவதாக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்கள் குழு குறிப்பிடுகிறது.

இதுவரை பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற உடல், மன, பாலுறவு வடிவங்களுக்கு மேலதிகமாக சைபர் தொழில்நுட்பம் மூலம் புதிய வகை துன்புறுத்தல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில குழுக்களின் கூட்டு பலத்தால் புதிய மாணவர்கள் துன்புறுத்தப்படுவது பல்கலைக்கழகங்களில் சிக்கலான பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துணைவேந்தர்கள் மற்றும் இயக்குநர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்த துணைவேந்தரும் பகிடிவத்தையை ஆதரிக்கவில்லை அல்லது குற்றவாளிகளைப் பாதுகாப்பதில்லை என்றும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *