போதைப்பொருள் வழக்கில் இருந்து கணவனை விடுவிக்க பொலிஸ் சார்ஜன்டுக்கு வேன் பரிசளித்த சுது அக்கா!

போதைப்பொருள் வழக்கில் சிறையில் உள்ள தனது கணவரை விடுவிக்க போலீஸ் சார்ஜென்ட்டுக்கு வேன் ஒன்றை பரிசாக அளித்ததாக கூறப்படுகிறது.

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரின் மனைவியுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சார்ஜன்ட் உட்பட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சார்ஜன்ட், வேனில் இருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, ​​அவர் ‘சுது அக்கா’ என தெரியவந்தது.

சந்தேக நபர் குருநாகல் மற்றும் அம்பன்பொல பிரதேசங்களில் போதைப்பொருள் விநியோகம் செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பெண்ணின் கணவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கைதியின் மனைவி, தனது கணவரை விடுவிப்பதற்காக மேற்படி சார்ஜென்ட்டுக்கு முன்னதாக வேன் ஒன்றை பரிசாக வழங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது.

இதன் பின்னர், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாளை 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அம்பனபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *