மீண்டும் குறைகிறது எரிபொருள் விலை

நாட்டில் எரிபொருள்களின் விலைகள் மீண்டும் குறைக்கப்படுகிறன என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி இன்று திங்கட்கிழமை (17) இரவு 9 மணிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படுகிறது என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 40 ரூபாவாலும் ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 92 ஒக்ரேன் ரக பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 370 ரூபாவாகும்.

ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் புதிய விலை 415 ரூபாவாகும்.

எனினும் ஏனைய எரிபொருள்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *