தியத்தலாவையில் போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

தியத்தலாவ,ஒக் 18

ஐயாயிரம் ரூபா மதிப்பிலான போலி நாணயத்தாள்களுடன் 3 பேர் தியத்தலாவையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபானம் நிலையம் ஒன்றில் வைத்து குறித்த 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *