100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்!

கொழும்பு,ஒக் 18

மேல், சப்ரகமுவ, மத்திய வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவடடங்களிலும் இன்றைய தினம் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மாவட்டத்தின் சில பகுதிகளிலும், 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம் என என அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *