முன்கூட்டிய ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான முதலாம் வாசிப்பு இன்று!

2023ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான முதலாம் வாசிப்பு இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது.

குறித்த நாட்களில் முற்பகல் 9.30 முதல் 10.30 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்று முற்பகல் 9.30 அளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளதோடு கனியவள உற்பத்திப் பொருட்கள் குறித்த திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, நாளைய தினம் நீதி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட 06 சட்டமூலங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

இதற்கமைய அபாயகரமான ஒளடதங்கள் திருத்தச் சட்டமூலம், நொத்தாரிசு திருத்தச் சட்டமூலம் மற்றும் மோசடிகளைத் தடுத்தல் திருத்தச் சட்டமூலம் உள்ளிட்டவை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் 22ஆம் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடத்தப்படவுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 21ஆம் திகதி 22ஆம் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் முடிவுக்கு வந்த பின்னர் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *