கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நேரத்தில் மாற்றம்!

கொழும்பு தாமரை கோபுரத்தை பொதுமக்கள் பார்வையிடும் நேரத்தை கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் திருத்தியுள்ளது.

அதன்படி, திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நுழைவுச்சீட்டுக்கள் விற்பனை செய்யப்படும் என்றும் பொதுமக்கள் இரவு 10.00 மணி வரை கோபுரத்தை பார்வையிடலாம் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேநேரம், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 09.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை டநுழைவுச்சீட்டுக்கள் விற்பனை செய்யப்படும் என்றும் பொதுமக்கள் தாமரை கோபுரத்தை இரவு 11.00 மணி வரை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

பாடசாலை சிறுவர்களுக்கான சிறப்புச் சுற்றுலாக்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உத்தியோகபூர்வ வருகைகள் முன்கூட்டியே முன்பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அந்த  நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

முன்பதிவுகளை செய்ய…. 074-2019743/ 0112 – 421874/ info@colombolotustower.lk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *