
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு முன்பாகவுள்ள புடைவை விற்பனை நிலையங்களில் வைத்து உயிர்கொல்லி போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவது தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அதனை வைத்து விற்பனை செய்த புடைவை விற்பனை நிலையங்களை மூடுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ். நகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்திய மூர்த்தி, மேற்படி விடயத்தைச் சுட்டிக்காட்டி யாழ். மாநகர முதல்வருக்கு நேற்று கடிதம் அனுப்பியுள்ளார்.
அதன் பிரதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக் கும். வர்த்தக சங்கத்தினருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
பணிப்பாளர் அனுப்பிய கடிதம் கிடைத்தது. விரைவில் அந்த வர்த்தக நிலையங்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
பிறசெய்திகள்