அடுத்த மாதம் முதல்முறையாக இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றது ஆப்கானிஸ்தான்!

இந்த ஆண்டு நவம்பரில் ஆப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர் லீக்கின் ஒரு பகுதியான இத்தொடரின் போட்டிகள், நவம்பர் 25, 27 மற்றும் 30 ஆகிய திகதிகளில் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.

போட்டிகள் முதலில் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இரு அணிகளின் கிரிக்கெட் அணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இத்தொடர் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் இலங்கைக்கான முதலாவது இருதரப்பு கிரிக்கெட் சுற்றுப்பயணம் இதுவாகும். இந்த இரு அணிகளும் இதற்கு முன்னர் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இரண்டு முறை ஆசிய கிண்ணத் தொடர் மற்றும் இரண்டு முறை உலகக் கிண்ணத் தொடர். இதில் இலங்கை 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

உலகக் கிண்ண சுப்பர் லீக்கில் ஆப்கானிஸ்தான் தற்போது 12 போட்டிகளில் 10 வெற்றிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. இலங்கை 18 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 10ஆவது இடத்தில் உள்ளது. முதல் எட்டு இடங்களை பெறும் அணிகள் உலகக்கிண்ணத் தொடருக்கு நேரடியாக தகுதி பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *