
நுகேகொட கிராமச் சந்தியில் இன்று (18) காலை 03 பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இன்று காலை 6 மணியளவில் கோட்டையில் இருந்து பயணித்த 138ஆம் இலக்க தனியார் பேருந்து வீதி விளக்குகளை புறக்கணித்ததன் காரணமாக மேலும் இரு பேருந்துகளுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் பஸ் சாரதி ஒருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து காரணமாக, ஹைலெவல் வீதியின் கம்சபை பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது.
பிறசெய்திகள்