
பெரும் போக நெற் செய்கைக்கான உர விநியோகத்தை விரைவுப்படுத்துமாறு கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போது மேற்கண்டவாறு கூறினார்.
இரசாயன உர இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டதன் காரணமாக பல போராட்டங்கள் நடைபெற்று ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தங்களும் ஏற்படுத்தப்பட்டன.
சேதன, அசேதன பசளைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப் பட்டிருந்த போதிலும் இதுவரை சேதனப் பசளை வழங்கப் படவில்லை. TSP பசளை முற்றாக வழங்கப்படுவதில்லை. காலம் கடந்த பசளை விநியோகம். வெளிச் சந்தைகளிலும் பசளைகள் கிடைக்கப் பெறுவதில்லை.
இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில் நெற் செய்கை வெற்றியளிக்கப் போவதில்லை. உணவு உற்பத்தி பாதிப்படைந்து கொண்டிருக்கின்றது. விவசாயிகள் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
எனவே சிறந்த திட்டமிடலோடு தாமதமின்றி விவசாயிகளுக்கு உரத்தை கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிறசெய்திகள்