சீன இராணுவத்தால் கவர்ந்தீர்க்கப்படும் பிரித்தானிய முன்னாள் இராணுவ விமானிகள்!

பிரித்தானிய முன்னாள் இராணுவ விமானிகள் சீன இராணுவத்திற்கு பயிற்சிகளை வழங்குவதற்காக பெருமளவிலான பணத்துடன் சீனாவிற்கு இழுக்கப்படுகின்றனர்.

30 முன்னாள் பிரித்தானிய இராணுவ விமானிகள் வரை சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க சென்றதாக கருதப்படுகிறது.

சீன இராணுவத்தில் பணிபுரியும் முன்னாள் இராணுவ விமானிகளுக்கு பிரித்தானிய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

விமானிகளை கவர்ந்தீர்க்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும், சமீபத்தில் அது அதிகரித்து வருவதாகவும் மேற்கு அதிகாரிகள் கூறுகின்றனர்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘விமானிகளின் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு தற்போதைய பிரித்தானிய சட்டத்தை மீறவில்லை, ஆனால் பிரித்தானிய மற்றும் பிற நாடுகளில் உள்ள அதிகாரிகள் செயற்பாட்டைத் தடுக்க முயற்சிக்கின்றனர்’ என கூறினார்.

237,911 பவுண்டுகள் வரை முன்னாள் இராணுவ விமானிகளுக்கு வழங்கப்படுமென மேற்கத்திய அதிகாரி கூறினார்.

ஓய்வுபெற்ற பிரித்தானிய விமானிகள் மேற்கத்திய விமானங்கள் மற்றும் விமானிகள் செயற்படும் விதத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறார்கள். இது தாய்வான் போன்ற ஏதேனும் மோதல்கள் ஏற்பட்டால் அது முக்கியமானதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *