இஸ்லாம் பாடப் புத்தங்களை பறித்த அரசாங்கம் – சபையில் எம்.பி ஆதங்கம்

இன்றைய சபை அமர்வில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான்:

இந்த நாட்டில் மதங்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்ந்துகொண்டே செல்கிறது.அதிலும் இஸ்லாம் சமயத்துக்கு எதிராக பல்வேறு அநீதிகள் இடம்பெறுகிறது.தரம் 6 தொடக்கம் 11 வரையான இஸ்லாம் பாடப் புத்தகங்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து,மாணவர்களிடமிருந்து புத்தகங்கள் மீளப் பெறப்பட்டன.

ஆனால் பல மாதங்கள் சென்ற பின்னரும் இன்று வரை புத்தகங்கள் மாணவர்களுக்கு மீள வழங்கப்படவில்லை.இது என்ன நடக்கிறது என்று புரியவில்லை.மாணவர்கள் எப்படி படிக்காமல் பரீட்சை எழுதுவார்கள் என்றார்.

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர்:அடுத்த வருடம் முதல் ,இஸ்லாம் பாடப் புத்தகங்கள் மீள மாணவர்களும் வழங்கப்படும் என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *