உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் நியமனம் !

உச்ச நீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நவம்பர் 9-ந்தேதி பதவி ஏற்க உள்ளார்.

தலைமை நீதிபதியாக தற்போது பதவி வகிக்கும் யு.யு.லலித், வரும் நவம்பர் 8 ஆம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ளார்.

இந்நிலையில், தனக்கு அடுத்த மூத்த நீதிபதியான சந்திரசூட் பெயரை தலைமை நீதிபதி பதவிக்கு மத்திய அரசுக்கு யு.யு லலித் பரிந்துரை செய்தார்.

அவரது பரிந்துரையை ஏற்று, சந்திரசூட்டை தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நியமித்துள்ளார்.

அடுத்த 2 ஆண்டுகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் டி.ஒய்.சந்திரசூட் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *