ஆர் பி கோ கம்பனியின் கீழ் இயங்கும் சாமிமலை மல்லியப்பு டீசைட் போன்ற இரு பிரிவுகளை சேர்ந்த சுமார் நானூறு தொழிலாளர்கள் இன்று (17) காலை தோட்ட பிரதான காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தீபாவளி பண்டிகை முன்பணமாக 15000/- வழங்க தோட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று 17 ம் திகதியாகியும் தமக்கான தீபாவளி முன்பணம் வழங்கபடாததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
15000/- ரூபாய் தீபாவளி கொடுப்பணவு வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ள போதும் குறித்த தோட்ட நிர்வாகம் வேலை நாட்களுக்கு அமைய ஐயாயிரம் ரூபாய் முதல் பதினைந்தாயிரம் ரூபாய் வரை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பல்வேறு முறைகேடுகள் ஆகியவற்றுக்கு மத்தியில் தாம் தீபாவளி திருநாளை கொண்டாடுவது எப்படி என்று குறித்த தோட்ட தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மலையக அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்த முன்வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

பிறசெய்திகள்