
வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஆகிவை இணைந்து நடத்தும் நடமாடும் சேவை எதிர்வரும் 22ஆம், 23ஆம் திகதிகளில் காலை 9.30 மணிதொடக்கம் பி.ப 4.30 மணிவரை கைதடியிலுள்ள வடக்கு மாகாணசபை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நடமாடும் சேவையில் பல சேவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி வாசித்தலில், எழுதுதலில் , விசேட தேவையுடையோருக்கான சாரதி அனுமதிப் பரீட்சையும் மருத்துவச்சான்றிதழ் பெற்றுக்கொள்ளலும், சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளல், தனிப்பட்ட மோட்டார் கோச்சினை ஓமினிபஸ்ஸாக மாற்றம் செய்தல், வாகன பதிவுப்பத்தகத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளல், வாகன இலக்கத்தகடு பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள், வாகன உடமை மாற்ற விண்ணப்பங்கள் கையேற்றல், 2014 / 2015 ஆம் ஆண்டு செயற்றிட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட வாகனங்களின் நிபந்தனைகளை நீக்குதல், வாகன நிறைசான்றிதழ் பெற்றுக் கொள்ளல், இதுவரை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டு தீர்க்கப்படாத நிலுவைகள், வாகன வருமானவரி தொடர்பான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.