போதைக்கு அடி­மை­யா­ன­வ­ரால் மனநலம் பாதிப்புற்ற மூதாட்டி வன்புணர்வு!

உயிர்­கொல்லி போதைப்­பொ­ரு­ளுக்கு அடி­மை­யான 40 வய­து­டைய ஒரு­வ­ரால் மன­ந­லம் பாதிக்­கப்­பட்ட 66 வய­தான பெண்­ணொ­ரு­வர் கடந்த 9ஆம் திகதி வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார். அந்­தப் பெண்ணை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­திய சந்­தே­க­ந­பரை பரு­தித்­துறை பொலி­ஸார் இது­வரை கைது செய்­ய­வில்லை. கைது செய்­வ­தற்­கான அக்­க­றை­யும் காண்­பிக்­க­வில்லை என்று குற்­றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது.

சந்­தே­க­ந­பர் 40 வய­து­டை­ய­வர். அதே­யி­டத்­தைச் சேர்ந்­த­வர். கடந்த 9 ஆம் திகதி சிறை­யி­லி­ருந்து சந்­தே­க­ந­பர் விடு­த­லை­யா­னார். அவர் மீது கொலை மற்­றும் உயிர்­கொல்லி போதைப் பொருளை உடை­மை­யில் வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டுக்­கள் என்­பன உள்­ளன.

கடந்த 9 ஆம் திகதி பாதிக்­கப்­பட்ட பெண்­ணின் வீட்­டுக்கு முன்­னால் இரவு வேளை சந்­தே­க­ந­பர் ‘ஹோர்ன்’ அடித்­துள்­ளார். பெண் வெளியே வந்­த­தும் அவ­ரது வீட்டு வாச­லில் வைத்தே குறித்த பெண்ணை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளார். பெண்­ணின் அல­றல் சத்­தம் கேட்டு அவ­ரது 70 வய­தான சகோ­தரி அங்கு வந்­த­போது அவர் மீது சந்­தே­க­ந­பர் தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ளார்.

காய­ம­டைந்த இரு பெண்­க­ளும் பருத்­தித்­துறை ஆதார மருத்­து­வ­ம­னை­யில் மறு­நாள் சிகிச்­சைக்­காக சேர்க்­கப்­பட்டு, சிகிச்­சை­யின் பின்­னர் வீடு திரும்­பி­யுள்­ள­னர். சம்­ப­வம் இடம்­பெற்று 9 நாள்­கள் கடந்­துள்ள நிலை­யி­லும் சந்­தே­க­ந­பரை பருத்­தித்­துறை பொலி­ஸார் இன்­னும் கைது செய்­ய­வில்லை.

பாதிக்­கப்­பட்ட பெண்­ணுக்கு 5 பிள்­ளை­கள் உள்­ள­னர். அவர்­கள் வேறு இடங்­க­ளில் வசித்­து­வ­ரு­கின்­ற­னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *