ஊசி மூலம் ஹெரோய்ன்: நால்­வர் கைது

நல்­லூர் அர­ச­டிப் பகு­தி­யில் ஊசி மூலம் உயிர்­கொல்லி ஹெரோய்ன் பயன்­ப­டுத்­திய குற்­றச்­சாட்­டில் 4 இளை­ஞர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

கைதான இளை­ஞர்­கள் 4 பேரும் 25 வய­து­டை­ய­வர்­கள் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அவர்­க­ளி­ட­மி­ருந்து 2 கிராம் ஹெரோய்ன் மீட்­கப்­பட்­டுள்­ளது.

யாழ். மாவட்ட குற்­றத்­த­டுப்பு பொலிஸ் பிரி­வின் உப பொலிஸ் பரி­சோ­த­கர் மேனன் தலை­மை­யி­லான அணி­யி­ன­ரால் இவர்­கள் நேற்று மதி­யம் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்­க­ளில் இரு­வர் மீது ஏற்­க­னவே 5 பிடி­யா­ணை­கள் உள்­ளன என்­றும் பொலி­ஸார் குறிப்­பிட்­ட­னர்.

கைதான சந்­தே­க­ந­பர்­கள் நீண்ட கால­மாக உயிர்­கொல்லி ஹெரோய்­னைப் பாவித்து வந்­துள்­ள­னர். ஆரம்­பத்­தில் யாழ். நக­ரப் பகு­தி­யில் அத­னைக் கொள்­வ­னவு செய்­த­தா­க­வும் தற்­போது கண்­கா­ணிப்பு தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கல் எழு­து­மட்­டு­வாள் பகு­தி­யில் கொள்­வ­னவு செய்­வ­தா­க­வும் விசா­ர­ணை­க­ளின்­போது அவர்க்­லள் கூறி­யுள்­ள­னர். பளை­யி­லி­ருந்து ஒரு­வர் அதனை எடுத்து வந்து எழு­து­மட்­டு­வா­ளில் வைத்து வழங்­கு­வ­தா­க­வும் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

கைதான சந்­தே­க­ந­பர்­க­ளின் பெற்­றோர் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய தக­வ­லுக்கு அமை­வா­கவே இவர்­கள் நேற்று கைது செய்­யப்­பட்­ட­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *