
நல்லூர் அரசடிப் பகுதியில் ஊசி மூலம் உயிர்கொல்லி ஹெரோய்ன் பயன்படுத்திய குற்றச்சாட்டில் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான இளைஞர்கள் 4 பேரும் 25 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. அவர்களிடமிருந்து 2 கிராம் ஹெரோய்ன் மீட்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான அணியினரால் இவர்கள் நேற்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இருவர் மீது ஏற்கனவே 5 பிடியாணைகள் உள்ளன என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைதான சந்தேகநபர்கள் நீண்ட காலமாக உயிர்கொல்லி ஹெரோய்னைப் பாவித்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் யாழ். நகரப் பகுதியில் அதனைக் கொள்வனவு செய்ததாகவும் தற்போது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகல் எழுதுமட்டுவாள் பகுதியில் கொள்வனவு செய்வதாகவும் விசாரணைகளின்போது அவர்க்லள் கூறியுள்ளனர். பளையிலிருந்து ஒருவர் அதனை எடுத்து வந்து எழுதுமட்டுவாளில் வைத்து வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
கைதான சந்தேகநபர்களின் பெற்றோர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைவாகவே இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.