போதை­மாத்­தி­ரையை விற்ற புடை­வைக்­க­டை­கள் மூடப்­ப­டும் -நகர முதல்­வர் வி.மணி­வண்­ணன்

யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு முன்பா­க­வுள்ள புடைவை விற்­பனை நிலை­யங்­க­ளில் வைத்து உயிர்­கொல்லி போதை மாத்­திரை விற்­பனை செய்­யப்­ப­டு­வது தொடர்­பில் சந்­தே­க­ந­பர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்ள நிலை­யில், அவர்­கள் அதனை வைத்து விற்­பனை செய்த புடைவை விற்­பனை நிலை­யங்­களை மூடு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று யாழ். நகர முதல்­வர் வி.மணி­வண்­ணன் தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைப் பணிப்­பா­ளர் மருத்­து­வர் த.சத்­தி­ய­மூர்த்தி, மேற்­படி விட­யத்­தைச் சுட்­டிக்­காட்டி யாழ். மாந­கர முதல்­வ­ருக்கு நேற்று கடி­தம் அனுப்­பி­யுள்­ளார். அதன் பிரதி யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­துக்­கும், வர்த்­தக சங்­கத்­தி­ன­ருக்­கும் அனுப்­பப்­பட்­டுள்­ளது.

‘பணிப்­பா­ளர் அனுப்­பிய கடி­தம் கிடைத்­தது. விரை­வில் அந்த வர்த்­தக நிலை­யங்­க­ளின் அனு­ம­திப்­பத்­தி­ரத்தை இரத்­துச் செய்­வ­தற்கு துரித நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்’ என்று முதல்­வர் வி.மணி­வண்­ணன் தெரி­வித்­தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *