போதைமாத்திரையுடன் கைதானவர்களுக்கு சிறை! – யாழ். நீதி­வான் நீதி­மன்­றம்

கோப்­பாய் பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட கல்­வி­யன்­காடு விளை­யாட்­ட­ரங்க வீதி­யில் வைத்து உயிர்­கொல்லி போதை­மாத்­தி­ரை­க­ளு­டன் நேற்­று­முன்­தி­னம் கைது செய்­யப்­பட்ட இரண்டு இளை­ஞர்­க­ளுக்­கும், யாழ். நீதி­வான் நீதி­மன்­றத்­தால் சிறைத்­தண்­டனை நேற்று விதிக்­கப்­பட்­டுள்­ளது.

மின்­சா­த­னங்­கள் விற்­பனை செய்­யும் போர்­வை­யில் நட­மா­டும் போதை­மாத்­திரை விநி­யோ­கத்தை அவர்­கள் முன்­னெ­டுத்து வந்­த­தாக பொலி­ஸார் குற்­றம் சுமத்­தி­யி­ருந்­த­னர்.

நேற்­று­முன்­தி­னம் கைது செய்­யப்­பட்ட இரண்டு இளை­ஞர்­க­ளும் யாழ்ப்­பா­ணம் நீதி­வான் நீதி­மன்ற நீதி­பதி ஏ.ஏ.ஆனந்­த­ராஜா முன்­னி­லை­யில் நேற்று முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர். இரு­வ­ரும் குற்­றங்­களை ஒப்­புக்­கொண்­ட­னர்.

இத­னை­ய­டுத்து இரு­வ­ருக்­கும் தலா 2 மாதங்­கள் சிறைத்­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *