புக்கர் விருது வென்றார் ஷெஹான் கருணாதிலக

2022 ஆம் ஆண்டுக்கான புக்கர் விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் குறித்து எழுதப்பட்ட தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அமைடா ( The Seven Moons of Maali Almeida ) எனும் படைப்புக்காகவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

புக்கர் விருதை வென்றதற்காக 50,000 பவுண்ட் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

இறுதிப் போட்டிக்கு தேர்வான 6 புத்தகங்களில் இருந்து இலங்கை எழுத்தாளர் எழுதிய புத்தகத்துக்கு புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டது.

ஷெஹான் கருணாதிலக்க எழுதிய இரண்டாவது புத்தகம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் ஆங்கில இலக்கியப் முழு நீள புனைவுக்காக வழங்கப்படும் மிக உயரிய விருது புக்கர் பரிசு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *