பூச்சிகளைச் சாப்பிட சிங்கப்பூரில் அனுமதி -பரிசீலனை ஆரம்பம்

சிங்கப்பூரில் பூச்சிகளைச் சாப்பிடுவதற்கு அனுமதியளிப்பது தொடர்பில் அந்தநாட்டு அரசாங்கம் பரிசீலனை மேற்கொண்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளவும், கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கவும் பரிசீலனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கம் அந்தநாட்டு உணவு மற்றும் கால்நடை தீவன துறையிடம் கருத்துகளை கோரியுள்ளது.

மேலும் பூச்சிகளை உணவாக உட்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளிடமிருந்தும் இதுதொடர்பான நடைமுறைகளை பெற்றுக்கொள்ள சிங்கப்பூர் உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

முழுமையான அறிவியல்பூர்வ ஆய்வின் பின் பூச்சியினங்களை உணவாக உட்கொள்ள அனுமதிக்கப்படும் எனவும் இந்தப் பூச்சிகளை நேரடியாகவோ அல்லது எண்ணெய்யில் பொரித்த திண்பண்டங்களாகவோ சாப்பிடலாம் எனவும் உணவு பாதுகாப்பு துறை மேலும் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *